இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
ராசாவைத் தொலைத்தொடர்புக்கு நியமித்துத் தன் குறள் வழி ஆட்சியின் மாட்சியைப் பறைசாற்றியுள்ளார் நம் முதல்வர்.
எச்சரிக்கை :
பலவீனமான இதயம் கொண்டோர் மற்றும் ஆளுங்கட்சி எடுபிடிகள் இணைப்புகளை வாசிக்க வேண்டாம்.
வாரம் 7 நாள், தினம் 12 மணி நேரம் உழைத்து, வாரச் சம்பளம் 1000 ரூபாய் வாங்கும் திருவாளர் பொதுஜனம் இதைப் படிக்குங்கால், மாரடைப்புகோ மனச்சிதைவுக்கோ உள்ளாகலாம். அத்தகைய சூழலில் தேவைப்படும் என்ற தொலைநோக்குடன் தான் நம் முத்தமிழ் அறிஞர் இலவச Ambulance மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல் படுத்தியள்ளார். (திட்டத்திற்கு வேறு காரணம் உண்டெனச் சொல்பவர்கள் அடுக்கடுக்கான இடிகளைத் தாங்கும் திராணி பெரும்பாலானோருக்கு இல்லையென்பதை மனதில் கொள்ள வேண்டும். )
வரிப் பணத்தைத் தானே எடுத்துக்கிறாங்க... கோவணத்தையா உருவறாங்க? மானம் கோவணத்தில் மட்டும் இல்லையென்பதெல்லாம் வெற்றுப் பேத்தல்.
இந்த வெட்டிப் பேச்சுக்கிடையில் திரிஷாவுக்குக் கணுக்கால் சுளுக்கியதையும், சச்சினின் 50வது சதத்தையும் மறந்தே போனேன்....
மீண்டும் சந்திப்போம்.