Total Pageviews

Saturday, January 21, 2012

பயணம்

 விலங்குகளைச் சவாரிக்குப் பழக்கப்படுத்திய காலம் முதலே பயணம் என்பது மனிதனுக்கு புத்துணர்வு அளிப்பதாகவும் களிப்படையச் செய்வதாகவும் மாறியிருக்க வேண்டும். அரை நூற்றாண்டுக்கு முன் வரை பயணம் வியாபாரிகளுக்கும் வீரர்களுக்குமானதாகவே இருந்து. (Exceptions can be ignored) இன்று அது யாவர்க்குமான ஒரு மிகப் பெரிய industry.
சுற்றுலா தரும் இன்பம் உடன் வருவோரும் பயணச் சுகமும் சார்ந்ததே என்பது என் கருத்து. முக்கொம்புக்கு அரைக்காத தூரத்தில் இருப்பவனுக்கு 300 மைல் தொலைவிலிருந்து அங்கு வருபவன் பெறும் இன்பம் கிடைக்காதென்பது திண்ணம். கடந்த காலத்தைப் பொருத்தவரை பயணம் என்பது அனுபவத்தைக் காட்டிலும் அவசியத்தின் பொருட்டாகவே இருந்துள்ளது.(காரணத்திற்காக காரியம்)


கடல் புறாவும் Gulliver's Travelsம் படிக்கும் போது அடைந்த இன்பத்தின்
சுவடு கூட Indian railwaysன் தொடர் வண்டிப் பயணங்களில் நான் உணர்ந்ததில்லை. Sleeper class berthகளின் தனித்தன்மை கொண்ட வாசனையோ, நீல நிற berthகளில் படிந்திருக்கும் சாம்பல் நிறக் கரையோ, கீழே வைத்திருக்கும் உடைமைகள் களவு போகாமல் இருக்க வேண்டுமென்ற பயமோ காரணமாக இருக்கலாம். இரயில பயணங்களில் நல்ல விஷயம்,
குறுக்கீடில்லாமல் புத்தகம் வாசிக்கலாம். இரவுப் பயணங்கள் அந்த வாய்ப்பையும் பிடுங்கிக் கொள்கின்றன. இரவுப் பயணங்களின் போது
upper berthல் படுத்துக் கொண்டு, pen tourchஐ வாயில் கடித்துக் கொண்டு புத்தகம் படித்த அனுபவம் நிறைய உண்டு. (இலவச இணைப்பாக, கழுத்து வலி உறுதி).


கடந்த முறை மதிய ஊர்தியில் செல்ல நேர்ந்தது. சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அந்த வண்டியில் இதற்கு முன்னரும் பயணம் செய்ததுண்டு. 6 மாதங்களுக்கு முன் அதே வண்டியில் சென்ற போது lower berth பதிவு செய்திருந்தேன். Middle berthகாரர்களும் open ticket நண்பர்களும் கீழிருக்கையை ஆக்கிரமித்துக் கொள்ள, அரையடி அகலத்தில் உட்கார்ந்து கொண்டே 7 மணி நேரம் பயணம் செய்ய நேர்ந்தது. இதில் எனதருகே ஒரு காதல் ஜோடி வேறு. அந்தப் பெண் open ticket வாங்கிக் கொண்டு காதலன் கொடுத்த தைரியத்தில் எனது இருக்கையை அவனுடன் பகிர்ந்து கொண்டாள். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட என்னால், அவன் மடியில் அவள் படுத்துறங்கியதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு காரணங்கள்.

1) Reserve செய்த நான் உட்க்கார்ந்து வர, என் berth-ல் அவள் படுத்துக் கொண்டது.
2) படுத்துறங்க அவனுக்கு ஒரு காதலி இருந்தது. வயிற்றெரிச்சல் தான்...!

அந்த அனுபவம்  நினைவிலிருக்க, இம்முறையும் lower berth என்றதும் யாரும் வரும் முன் upper berth-ஐ ஆக்கிரமித்துக் கொண்டேன். உரியவர் கேட்டால் berth-ஐக் கொடுக்கலாம் என்று ஒரு புத்தகத்தைப் படிக்கவும் ஆரம்பித்து விட்டேன். அன்று அந்தப் பெட்டி முழுவதும் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிந்தது. கார்த்திகை மாதம் என்பது நினைவிலுறைத்தது. அந்தக் கூட்டத்தில் இரு சிறுமி சாமிகள் இருந்தனர். (ஐயப்ப பக்த்தர்கள் சாமிகள் தானே?) வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுமிகள் கதை பேசவும், விளையாடவும், ஆரஞ்சுப் பழம் சாப்பிடவும் ஆரம்பித்து விட்டனர். பழங்கள் எப்போதும் பிறர் திண்ணும் போது தான் மிகச் சுவையாகத் தெரிகின்றன போலும். (அதற்காக நானொன்றும் அவர்கள் திண்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை.) என்னையுமறியாமல் அவர்களை ரசித்துக் கொண்டிருந்தேன் போலும். அதை கவனித்த ஒரு சிறுமி பழம் வேண்டுமா என்றாள். நாசமாய்ப் போன formality வேண்டாம் என்று சொல்ல வைத்தது. குட்டிப் பெண்கள் இருவரும் என்னோடு வாயாடத் தொடங்கினர்.

அவர்களது பெயர் ப்ரியா, விமலா என்று அறிந்து கொண்டேன். என் பெயரைச் சொன்னவுடன் இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர். இது ஒன்றும் எனக்குப் புதிதல்லவாகையால் அவர்களுடன் உரையாட ஆரம்பித்தேன். நான் கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பார்த்து " என்ன அண்ணா, bible படிக்கிறீங்கள?" என்று கேட்டாள் 7  வயதான ப்ரியா. அப்புத்தகத்தை எழுதிய சாரு நிவேதிதா கேட்டிருந்தால் பூரித்துப் போயிருப்பார். கல்லூரிப் பருவத்தைக் கடந்தவர்கள் வார, மாத இதழ்களைக் காட்டிலும் பெரிய size புத்தகங்களைப் படித்தால் அது பைபிள் ஆகவே இருக்க முடியும் என்று பாலகர்கள் முடிவு செய்யும் வகையில் தான் நாம் வாழ்கிறோம் என்பது வேதனைக்குரியது.

இரு வாண்டுகளும் வந்து என் upper berth ல் அமர்ந்து கொண்டு என்னுடன் விளையாட ஆரம்பித்தனர். nursey பள்ளியில்  நான் விளையாடிய அதே விளையாட்டுகள் இன்னும் உயிர்ப்புடன் இருந்தன.

உச்சி விளாம்பழத்தின் உட்ச்சுளையும் பச்சேலப்
பொடியும் பாங்கைக் கலந்தள்ளி இச் இச்சென
உண்ணும் இன்பந்தான் நீ கொடுக்கும்
பிச்சை முத்தக் கீடாமோ...!

பாவேந்தரின் வரிகள் தான் எத்தனை உண்மையானவை....! 
இதைக் காட்டிலும் இன்பமான தருணமும் உளதோ என்றே தோணிற்று. உள்ளது என்று புரிய வைத்தது சேலத்திற்குப் பிறகான பயணம்.
சேலத்தில் நிறையப் பேர் எங்களது compartment ல் ஏறினர். அன்று nursing கல்லூரித் தேர்வுகள் முடியும் நாள் என்று பிறகு தெரிந்து கொண்டேன். சேர நன்னாட்டிற்குச் செல்லும் அந்த தொடர் வண்டியில் ஏறியவர்கள் மலையாளப் பெண்கள். (ஏறக்குறைய அனைவரும்). அவர்கள் யாரும் முன்பதிவு செய்திருக்கவில்லை. தன்னுடைய இருக்கைக்குப் போகிறேன் என்று கீழே குதித்தாள் விமலா. ஒரு கட்டுப்படுத்திய அலறல் கேட்டது. கீழே நின்றிருந்த ஒரு அழகான (அழகு என்ற வார்த்தை அவளது அழகுக்கு நிச்சயம் நியாயம் செய்திருக்கவில்லை ) பெண்ணின் காலை இந்தச் சிறுமி மிதித்து விட்டாள். நான் கவனித்த நொடியில் அந்தப் பதுமை தன் வலியை மறைத்துக் கொண்டு தன் மீது விழுந்த சிறுமியைப் பார்த்து "Are you alright?" என்றாள். 

இதை எழுதத் தொடங்கி 15 மாதங்கள் ஆகின்றன. காலாண்டுக்கு ஒரு முறை மட்டுமே எழுதினேன். இதன் முதல் பத்தி இப்போது படிக்க எனக்கே பிடிக்கவில்லை. சிலருக்காவது இதை மேற்கொண்டு படிக்கும் ஆர்வம்  இருந்தால் மட்டும் தொடரும்..........

 

Wednesday, December 22, 2010

குறள் வழி ஆட்சி


இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

ராசாவைத் தொலைத்தொடர்புக்கு நியமித்துத் தன் குறள் வழி ஆட்சியின் மாட்சியைப் பறைசாற்றியுள்ளார் நம் முதல்வர்.



எச்சரிக்கை :
 பலவீனமான இதயம் கொண்டோர் மற்றும் ஆளுங்கட்சி எடுபிடிகள் இணைப்புகளை வாசிக்க வேண்டாம்.
வாரம் 7 நாள், தினம் 12 மணி நேரம் உழைத்து, வாரச் சம்பளம் 1000 ரூபாய் வாங்கும் திருவாளர் பொதுஜனம் இதைப் படிக்குங்கால், மாரடைப்புகோ மனச்சிதைவுக்கோ உள்ளாகலாம். அத்தகைய சூழலில் தேவைப்படும் என்ற தொலைநோக்குடன் தான் நம் முத்தமிழ் அறிஞர் இலவச Ambulance மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல் படுத்தியள்ளார். (திட்டத்திற்கு வேறு காரணம் உண்டெனச் சொல்பவர்கள் அடுக்கடுக்கான இடிகளைத் தாங்கும் திராணி பெரும்பாலானோருக்கு இல்லையென்பதை மனதில் கொள்ள வேண்டும். )




வரிப் பணத்தைத் தானே எடுத்துக்கிறாங்க... கோவணத்தையா உருவறாங்க? மானம் கோவணத்தில் மட்டும் இல்லையென்பதெல்லாம் வெற்றுப் பேத்தல்.
இந்த வெட்டிப் பேச்சுக்கிடையில் திரிஷாவுக்குக் கணுக்கால் சுளுக்கியதையும், சச்சினின் 50வது சதத்தையும் மறந்தே போனேன்....
மீண்டும் சந்திப்போம்.

Wednesday, November 24, 2010

நானும் ஒரு .......?

                                                      
"பேணாவும் பேப்பரும் இருக்கிறது என்பதற்காக மட்டும் எழுதிவிடக் கூடாது. பதிக்கப்படும் ஒவ்வொரு வாக்கியமும் அதற்கான அவசியத்துடன் மட்டுமே எழுதப்பட வேண்டும்." என்ற ஜெயகாந்தனின் கருத்தில் முழு நம்பிக்கையுடையவன்  நான். கம்ப்யுடர்களின் எண்ணிக்கைக்கு இணையாக bloggers முளைப்பதும் எனக்கு உடன்பாடு அல்ல.




 இந்நேரம் "அப்புறம் என்ன ம......க்கு நீயும் blog எழுதற? "  என்கிற கேள்வி எழாதவர்கள்
1 ) வேறு சிந்தனைகள் இல்லாத மற்றொரு சமயத்தில் படிக்கலாம்.
2 ) சொரணைக் குறைவு நோய்க்காக மருந்து உட்க்கொள்ளவோ உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம்.
3 ) தாய் நாட்டின் இறையாண்மை பறி போவதையும், தன் இனம் படுகொலை செய்யப்படுவதையும் உணர்வின்றிச் செய்தியாக மட்டும் தருகின்ற NDTV , Times Now , CNN IBN போன்ற so called செய்திச் சேனல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

பிறந்தது முதல் திராவிடக்  கட்சிகளின் ஆட்சியில் வாழும் இளையனுக்கு, கொள்கை வேறு, செயல் வேறு என்றிருப்பதில் வியப்பொன்றும் இருக்கத் தேவையில்லை.
மிக உயர்ந்த கொள்கைகள் என்று நானே எண்ணுகிற, சில விஷயங்களைப் பேசவும் விவாதிக்கவும் செய்து விட்டு, நடைமுறையில் அவற்றில் பெரும்பாலானவற்றைக் கடைப்பிடிக்கத் தைரியமில்லாத, வக்கில்லாத, இதே தகுதிகள் கொண்ட பெரும்பான்மை சமூகத்தால் "நல்லவன்" எனப்படும் ஒரு மானங்கெட்ட முரண்பாட்டுக் குவியல் நான்.

இந்த முரண்பாடுகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது.
"நுகர்வுக் கலாச்சாரத்தால் saving-economy spending-economyஆக மாறுகிறது. இது மாபெரும் தவறு" என்று வெளியில் பேசிக் கொண்டே, நண்பனுக்குக் கைக்குட்டை வாங்கப் போகையில் discountகள் வசம் மனம் மயங்கி 2 phant வாங்கி வருவது ஒரு உதாரணம்.

 நான் இத்தகையவனாக மாறி விட்டேனே என்ற உறுத்தலின் பக்கவிளைவு தான் " நான் இத்தகையவன்" என உலகிற்குப் பறைசாற்றும் முயற்சியின் இந்த blog வடிவம்.
ஒரு இலக்கியப் படைப்பையோ, வட்ட, மாவட்ட, மாநில, மத்திய, உலக நிகழ்வுகள், சினிமா, விளையாட்டு விமர்சனங்களையோ எதிபார்த்து வாசித்தவர்கள் மன்னிக்கவும். என்னைப் போலவே வாழும் முரண்பாட்டு நண்பர்கள் ஒரு மிகப் பெரிய market.  அவர்களைச் சந்தைப் படுத்திய corporateகளின் வரிசையில் எனது blogயும் சேர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்........